சிவமயம்

ESTD: 10/05/2020

எல்லாம் வல்ல சிவபரம் பொருளின் திருவருளையும் குருவருளையும் சிந்தித்து மகிழ்கிறோம். உலகெங்கும் உள்ள ஆதிசைவ சிவாசாரியப் பெருமக்கள் பெரியோர்களை வணங்கி சிறியோர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. இன்று உலக நாடுகள் முழுதும் ஆலயங்களும் அடியார்களும் நிறைந்து வரும் சூழலில் அவ்வாலய பூஜைகளை வேதாகம மரபுப்படி செய்து பக்தர்களுக்கு இறையருளைப் பெற்றுத்தரும் சிவாசாரிய குடும்ப இளைஞர்கள் தமிழகம் வந்து பாடசாலையில் பயின்று பயிற்சிபெற இடையூறுகள் நிறைய உள்ளதால் இன்றைய விஞ்ஞான வசதிகளைப்பயன்படுத்தி ஆன்லைன் மூலம் வேதாகம பாடங்களைப் பயின்று சிறந்த அர்ச்சகர்களை உருவாக்க சிவபுரம் க்ளோபல் சிவாகம அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்வழி ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு என்ற நிலைகளில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் விரும்பும் வகையில் இக்கல்வியாண்டுத் திட்டங்கள் ஏதாவது ஒன்றில் இணைந்து பயின்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். ஆண்டுக்கொருமுறை நேர்முகப்பயிற்சியும் தேர்வுகளும் நடைபெறும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சிவபுரம் வேதசிவாகம பாடசாலை சான்றிதழும் விருதும் வழங்கப்படும்.
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் விரும்பும் ஆகமபூஜை நெறிகளை இனிவரும் சந்ததிகளுக்கு எடுத்துச்செல்ல அனைத்துலக ஆதிசைவ சிவாசாரியப் பெருமக்களை அன்புடன் அழைக்கின்றோம்.

லோகாஸ்ஸமஸ்தாஸ்ஸுகினோ பவந்து